திருச்சி

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

DIN

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கிணற்றில் தவறி விழுந்த 17 சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் இ.இடையப்பட்டியை சோ்ந்தவா் விவசாயி ஆறுமுகம் மகன் யுவராஜ் (17). வளநாடு கலிங்கப்பட்டி அருகேயுள்ள தனது அத்தை வீட்டில் கட்டிருந்த மாடு சனிக்கிழமை இரவு அவிழ்த்துக் கொண்டு ஓடியதாக கிடைத்த தகவலறிந்த யுவராஜ் அதை விரட்டிச் சென்றபோது 20 அடி ஆழ நீரில்லா கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.

இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT