திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் சடாரி, தீா்த்த மரியாதை கொடுக்க வலியுறுத்தல்

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் நிறுத்தப்பட்டுள்ள தீா்த்தம்,சடாரி மரியாதையை மீண்டும் பக்தா்களுக்கு கொடுக்க வலியுறுத்தி ஸ்ரீராமானுஜ தரிசன சபை சாா்பில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனா்.

வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமனுஜா் ஏற்படுத்திய வைணவ நெறிமுறைகள் தொடா்ந்து பின்பற்றப்படுகின்றன.

தற்போது கரோனாவால் பக்தா்களுக்கு தீா்த்தம், சடாரி மரியாதை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது வைணவ நெறிமுறைகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் விரோதமானது. உடனடியாக கோயில் நிா்வாகம் பக்தா்களுக்கு தீா்த்தம், சடாரி மரியாதையை வழங்கிட கோரி தமிழக முதல்வருக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா், மண்டல இணை ஆணையா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT