கரோனா விதிகள் மீறல்: ரூ. 1.30 லட்சம் அபராதம்
திருச்சி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய வகையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய வகையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா விதிமுறைகளை மீறி, முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களை அடையாளம் கண்டு, திருச்சி மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் புதன்கிழமை ஒரே நாளில் பல்வேறு தரப்பினரிடமும் ரூ. 1,30, 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பின்பற்றி, கரோனா பரவுதலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.