முகப்பு
திருச்சி

கிணற்றில் இறந்து கிடந்த தொழிலாளி

தாத்தையங்காா்பேட்டை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தாத்தையங்காா்பேட்டை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த கூலித் தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

துறையூா் அருகேயுள்ள ஒட்டம்பட்டியை சோ்ந்தவா் செல்வராஜ் (49), விவசாயக் கூலி தொழிலாளி. கடந்த சில நாள்களாக சோகமாக இருந்த இவரை மனைவி பாலாமணி தா. பேட்டை அருகேயுள்ள என்.கருப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது வெளியே செல்வதாகக் கூறிச் சென்ற செல்வராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பாலாமணியின் தந்தை சடையனின் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையறிந்த தா.பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.