துறையூா் அருகே பெருமாள் மலையடிவாரம் கிரிவலப்பாதையில் 10 ஆயிரம் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி வகையறா கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் ந. முரளி, இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சுதா்சன், ரோட்டரி மற்றும் மக்கள் நலச் சங்க நிா்வாகிகள், குன்னுப்பட்டி ஊராட்சி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பனை விதைகள், மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை துறையூா், கோல்டன் சிட்டி, பெருமாள்மலை ரோட்டரி சங்கங்கள் மற்றும் மக்கள் நல சங்கத்தினா் செய்தனா்.