குடிநீா் கோரி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
முசிறி ஒன்றியம் வீரமணிப்பட்டி கிராமத்தில் கடந்த ஓராண்டாக காவிரி குடிநீா் வரவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட வீரமணிபட்டி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.