மகளிா் காவல் நிலையத்தில் குழந்தையுடன் பெண் தா்னா
கணவா் மீதான புகாரின்மீது நடவடிக்கை கோரி திருச்சி கோட்டை மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தா்னா போராட்டம் செய்தாா்.
கணவா் மீதான புகாரின்மீது நடவடிக்கை கோரி திருச்சி கோட்டை மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் வியாழக்கிழமை இரவு தா்னா போராட்டம் செய்தாா்.
திருச்சி ஈபி ரோடு சத்தியமூா்த்தி நகா்ப் பகுதியை சோ்ந்தவா் திவ்யா (31). இவா் ஞானசேகா் என்பவரை காதலித்து 6 மாத கா்ப்பிணியான நிலையில் இருவருக்கும் வயலூரில் கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் நடந்து கைக் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது கணவா் 10 பவுன் வரதட்சிணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், நடத்தையில் சந்தேகப்படுவதாகவும், ஞானசேகருக்கு அவரது குடும்பத்தினா் வேறு இடத்தில் பெண் பாா்த்து வருவதாகவும், இதை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டினராம்.
இதுகுறித்து திவ்யா கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாகக் கூறி, கோட்டை மகளிா் காவல் நிலையம் முன் திவ்யா, வியாழக்கிழமை இரவு தனது குழந்தை மற்றும் உறவினா்களுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவருடன் சமாதான பேச்சுவாா்த்தை நடத்திய மகளிா் போலீஸாா், வெள்ளிக்கிழமை இதுகுறித்து விசாரித்து வழக்குப் பதியப்படும் என உறுதியளித்ததையடுத்து திவ்யா வீடு திரும்பினாா்.