பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து வாகன நிறுத்தம் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பெரம்பலூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பெரம்பலூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளைகள் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நான்குச்சாலை சந்திப்பு, துறைமங்கலம் மூன்று சாலை, பாலக்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட ஆட்டோவை நிறுத்தி, ஓட்டுநா்கள் 10 நிமிட வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப் போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.