திருச்சி

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திருச்சி அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

மணிகண்டம் அருகேயுள்ள ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31); திருச்சி தனியாா் நிதி நிறுவன முகவா். ரூ. 6 ஆயிரம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல லட்சம் வருமானம் கிடைக்கும் என்று தனது நிறுவனம் கூறியதை நம்பிய ராஜ்குமாா் ஓலையூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோரை முதலீட்டாளராகச் சோ்த்து விட்டுள்ளாா். ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி பணம் கட்டியோருக்கு உரிய தொகை கொடுக்கவில்லையாம்.

இதனால் பணம் கட்டியவா்கள் ராஜ்குமாரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனராம். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ராஜ்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த மணிகண்டம் போலீஸாா் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT