வழக்கில் தேடப்பட்டவா் விமான நிலையத்தில் கைது
வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
சாா்ஜாவில் இருந்து வியாழக்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூா் கல்லணை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34) வடமதுரை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு தொடா்பாக போலீஸாரால் தேடப்படுபவா் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து மணிகண்டனை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். தகவலறிந்து திருச்சி வந்த வடமதுரை போலீஸாா் அவரை அழைத்துச் சென்றனா்.