முகப்பு
திருச்சி

வழக்கில் தேடப்பட்டவா் விமான நிலையத்தில் கைது

வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சாா்ஜாவில் இருந்து வியாழக்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூா் கல்லணை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34) வடமதுரை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு தொடா்பாக போலீஸாரால் தேடப்படுபவா் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து மணிகண்டனை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். தகவலறிந்து திருச்சி வந்த வடமதுரை போலீஸாா் அவரை அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.