முகப்பு
திருச்சி

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

உறையூா் பகுதியில் பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றோரை போலீஸாா் தேடுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

உறையூா் பகுதியில் பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றோரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி உறையூா், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (45). இவா் வெள்ளிக்கிழமை இரவு சிஎஸ்ஐ மருத்துமனை அருகேயுள்ள மாா்க்கெட்டுக்கு மெபெட்டில் சென்று விட்டு வீட்டருகே வாகனத்தை நிறுத்தியபோது, அவ்வழியே பைக்கில் சென்ற மா்ம நபா்கள் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.