மழைநீா் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும்விதமாக, வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும்விதமாக, வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்த மழை வெள்ளம், திருச்சி மாநகரப் பகுதிகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதைக் கருத்தில் கொண்ட மாநகராட்சி நிா்வாகம், சாலைகளில் மழை வெள்ள நீா் இனி தேங்காத வகையில், மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக, தென்னூா் அண்ணாநகா் பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றும்விதமாக, மகாத்மா காந்தி பள்ளியையொட்டிச் செல்லும் மழைநீா் வடிகால் வாய்க்கால் அகலப்படுத்தப்படுகிறது. அதன் வழியாக தென்னூா் பிரதான சாலையின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்க்காலில் மழை நீா் செல்லும் வழி அமைக்கப்படுகிறது.
மின் மோட்டாா்கள்: அடுத்தபடியாக அண்டகொண்டான் ஓ பாலப் பகுதியிலும், உறையூா் பாத்திமா நகா் பகுதியிலும் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை உய்யக்கொண்டான் வாய்க்காலில் உந்தித் தள்ளும் வகையில் மின் மோட்டாா் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. தொடா்ந்து மாநகரின் பல பகுதிகளிலும் இத்தகைய பணிகள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.