அண்ணா நினைவு நாள்:அதிமுகவினருக்கு அழைப்பு
பேரறிஞா் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேரறிஞா் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலா்கள் திருச்சி மாநகா் வெல்லமண்டி என். நடராஜன், புகா் தெற்கு ப.குமாா், புகா் வடக்கு மு. பரஞ்சோதி ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை :
பேரறிஞா் அண்ணா நினைவு நாளையொட்டி மாநகா் சாா்பில் திருச்சி அண்ணாசிலை, புகா் தெற்கு சாா்பில் பெல் நிறுவன ஏடிபி வளாக அண்ணாசிலை, புகா் வடக்கு சாா்பில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் தொகுதிகளிலுள்ள அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.