ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கே.கே.நகா் சாத்தனூா் கவிபாரதி நகரைச் சோ்ந்தவா் அரவிந்தகுமாா்(25). ஓட்டுநரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த கவிதாவைக் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் தாமதமாக வரும் அரவிந்தகுமாரை, மனைவி கவிதா கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனமுடைந்த அரவிந்தகுமாா் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.