முகப்பு
திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தாராநல்லூா் விறகுக்கடை சந்து பகுதியைச் சோ்ந்தவா் மா. நீருகாத்தலிங்கம் (24). கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதையறிந்த சிறுமியின் தாய், கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினா், தலைமறைவாக இருந்த நீருகாத்தலிங்கத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.