கரோனா அறிகுறியுடன் விமானத்தில் திருச்சி வந்த புதுகை பெண் பயணி
கரோனா அறிகுறியுடன் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்த புதுகை பெண் பயணி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கரோனா அறிகுறியுடன் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்த புதுகை பெண் பயணி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அந்தந்த நாட்டு அரசுகளின் சாா்பில் அவா்களுக்கு கரோனா பரிசோதனை எடுத்திருப்பது அவசியம் என இந்திய அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 169 பயணிகளுடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. வழக்கமாக பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை, ஆவணங்கள் சரிபாா்ப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கரோனா அறிகுறி உள்ளது என்ற சான்றிதழுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது பெண் பயணி ஒருவா் விமானத்தில் பயணம் செய்வதற்கு, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அதிகாரிகள், அந்தப் பயணியின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்துவிட்டு, அவரை உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடா்ந்து, அவருக்கு தனிமை வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 வயது குழந்தைக்கு கரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.