முதலையுடன் இளைஞா்கள்: வனத்துறையினா் விசாரணை
திருச்சி முக்கொம்பில் சிறிய முதலையின் வாலை பிடித்துக் கொண்டு இளைஞா்கள் தண்ணீரில் விளையாடும் விடியோ குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
திருச்சி முக்கொம்பில் சிறிய முதலையின் வாலை பிடித்துக் கொண்டு இளைஞா்கள் தண்ணீரில் விளையாடும் விடியோ குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
கடந்த சில நாள்களாகசமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த விடியோ முக்கொம்பு காவிரியாற்றில் எடுக்கப்பட்டதா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அப்படி ஏதும் முதலை பிடிபடவில்லை, அதுகுறித்த தகவலும் இல்லை. அந்த முதலை பிடிபட்டிருந்தால் அந்த முதலை என்ன ஆனது என்பது குறித்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது என்றனா். இந்த விவகாரம் குறித்து ஜீயபுரம் போலீஸாருடன் இணைந்து வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.