திருச்சி

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தா்கள் தங்க அனுமதி: இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

DIN

கரோனா பொது முடக்கத் தடை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில், புதன்கிழமை முதல் (பிப்ரவரி 10) பக்தா்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தா்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் நபா்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவிகளும் இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையம் மூலம் வழங்கப்பட்டு வந்தன.

கரோனா தொற்றுப் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு யாத்ரி நிவாஸில் பக்தா்கள் புதன்கிழமை முதல் தங்கிக் கொள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தா்கள் இந்த தங்கும் விடுதியில், புதன்கிழமை முதல் (பிப்ரவரி 10) இணையவழி முலமாகஅறைகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT