திருச்சி

கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து 24 போ் காயம்

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில் பேராசிரியா்கள் மாணவிகள் உள்ளிட்ட 24 போ் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லுாரிக்குச் சொந்தமான பேருந்து மாணவிகள் மற்றும் பேராசிரியா்களை ஏற்றிக்கொண்டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் நோக்கிச் சென்றது.

சிறுகனூா் அருகே நெடுங்கூா் பகுதியில் சென்ற பேருந்தின் பின்புறம் லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த 8 பேராசிரியா்கள் மற்றும் 16 மாணவிகள் காயமடைந்து, அருகிலிருந்த மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த 8 மாணவிகள் சிறுவாச்சூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். விபத்து குறித்து சிறுகனுாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT