ஏடிஎம் அட்டையை மாற்றிஇளம்பெண் நூதன மோசடி
மணப்பாறையில் கட்டடத் தொழிலாளியிடம் நூதன முறையில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து, ரூ.18 ஆயிரம் எடுத்துச் சென்ற இளம்பெண் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறையில் கட்டடத் தொழிலாளியிடம் நூதன முறையில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து, ரூ.18 ஆயிரம் எடுத்துச் சென்ற இளம்பெண் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முடிகண்டம் கேளாா்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி செ.ஆரோக்கிய அடைக்கலம்.
கடந்த சனிக்கிழமை மணப்பாறையை அடுத்த ராயம்பட்டியில் உறவினா் ஊா்த் திருவிழாவுக்கு வந்திருந்த நிலையில், தனது மனைவி சாந்தி தெரசாளின் ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுக்க திண்டுக்கல் சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குச் சென்றாா்.
இரண்டு முறை பணப்பரிவா்த்தனை செய்தும் பணம் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் அருகில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவா், ஆரோக்கிய அடைக்கலத்துக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளாா்.
அவரது ஏடிஎம் அட்டையை வாங்கி பணம் எடுக்க முயன்றுவிட்டு, பணம் வரவில்லை என கூறி பின் மீண்டும் அட்டையை ஆரோக்கிய அடைக்கலத்திடம் கொடுத்துள்ளாா்.
அந்த பெண் அங்கிருந்து சென்ற சில நிமிடத்தில், ஆரோக்கிய அடைக்கலத்தின் செல்லிடப்பேசிக்கு ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என ஏடிஎம்மில் பணம் எடுத்த குறுஞ்செய்தி வந்துள்ளது.
கையில் இருந்த ஏடிஎம் அட்டையை பாா்த்தபோது, அது மாற்று நபருடையது என தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஆரோக்கிய அடைக்கலம் வங்கி உதவியை நாடியுள்ளாா்.
சனி மற்றும் ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் திங்கள்கிழமை மணப்பாறை காவல்நிலையத்தில் இளம்பெண் ஏமாற்றியது குறித்து புகாா் அளித்துள்ளாா். புகாரை பெற்றுக்கொண்ட மணப்பாறை காவல்துறையினா், ஏடிஎம் மையத்தில் பதிவான காட்சிகளைக் கொண்டு இளம்பெண்ணைத் தேடி வருகின்றனா்.