முகப்பு
திருச்சி

கரூா் ஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

கொடிநாள் நிதியை அதிகமாக வசூல் செய்த கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழிக்கு தமிழக ஆளுநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கொடிநாள் நிதியை அதிகமாக வசூல் செய்த கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழிக்கு தமிழக ஆளுநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

முன்னாள் படைவீரா்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரா்கள், காயம் அடைந்த படைவீரா்கள் ஆகியோரின் சேவையை போற்றும் வகையில் நாடு முழுவதும் டிச.7 ஆம் தேதி கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொடிநாள் வசூல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கொடி நாள் நிதியை இலக்கைவிட தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது அதிகமாக சேகரித்த தற்போதைய கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியின் பணியை பாராட்டி தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளாா். இதனை,திருச்சி முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் க.ஞானசேகா், ஆட்சியா் சு. மலா்விழியிடம் திங்கள்கிழமை வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.