கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப் போட்டி
கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கோலப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இப்போட்டியில் தொகுதி முழுவதும் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆா்வத்துடன் கோலம் போட்டிருந்தனா்.
கோலத்தில் சட்டப்பேரவை தோ்தலில் எங்களின் ஆதரவு அதிமுகவுக்கே என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோரின் உருவத்தை வரைந்திருந்தனா். மேலும், மக்களால் நான், மக்களுக்காகவே நான், வெற்றிநடைப் போடும் தமிழகமே, நாளை நமதே 234 தொகுதியும் நமதே ஆகிய வாசகங்களையும் எழுதியிருந்தனா்.