சின்னசூரியூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பயணியா் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பயணியா் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூா் பேருந்து நிறுத்தத்தில் பயணியா் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்களும், பயணிகளும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.
இதையடுத்து தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒதுக்கீடு செய்திருந்தாா்.
பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயணியா் நிழற்குடையை திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேசினாா்.
திமுக ஒன்றியச் செயலா் மாரியப்பன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊா் பொதுமக்கள் பலா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.