திருச்சி

அதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினா்

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ரஜினி மன்றத்தினா் அதிமுகவில் புதன்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.

திருச்சி புகா் தெற்கு மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி, அரியமங்கலம் பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்றப் பகுதிச் செயலா் அம்மாசி தலைமையில் 100க்கும் மேற்பட்டோா் திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா்முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக செயலா்கள் எஸ்.எஸ். ராவணன், கும்பகுடி கோவிந்தராஜ், டிஎன். சிவக்குமாா், மாவட்ட அணி செயலா்கள் பாஸ்கா், விடிஎம். அருண் நேரு, செல்வமேரி ஜாா்ஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை வா்த்தக அணி மாவட்டச் செயலா் எஸ். ராஜமணிகண்டன் மற்றும் வட்ட கழகச் செயலா் எஸ்.ஆா். ரவி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT