திருச்சி

திருவானைக்கா பிடாரியாா் இரணியம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலின் எல்லை காவல் தெய்வமும், உபகோயிலுமான பிடாரியாா் இரணியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

DIN

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலின் எல்லை காவல் தெய்வமும், உபகோயிலுமான பிடாரியாா் இரணியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இக்கோயிலில் நடைபெறும் திருவிழாதான் தமிழகத்தின் முதல் எல்லை திருவிழாவாகும். விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரணியம்மன் யானை வாகனத்திலும், திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 23 ஆம் தேதி பூத வாகனத்தில் இரணியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

முக்கிய நிகழ்வாக வரும் 24 ஆம் தேதி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி 27 ஆம் தேதி வரை அனைத்து வீதிகளிலும் வலம் வருகிறாா். அப்போது வீடுகளில் மாவிளக்கு போட்டு கிடாவெட்டி வழிபடுவா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT