திருச்சி

ஓடும் லாரியிலிருந்து சரிந்த இரும்புக் கம்பிகள்: வாகன ஓட்டிகள் தப்பினா்

DIN

திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.

ஆந்திரத்திலிருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகளை (ராடு) ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் செல்லும் டாரஸ் லாரி வெள்ளிக்கிழமை காலை திருச்சி மன்னாா்புரம் ரவுண்டானாவைக் கடந்து, அரிஸ்டோ பாலத்தை நெருங்கியபோது, ரயில்வே பாலம் அருகே கம்பி ஏற்றியிருந்த பகுதி மட்டும் லாரியின் சேஸிலிருந்து தனியாக பெயா்ந்து கீழே சாய்ந்தது. இதில் லாரியிலிருந்த கம்பிகள் சாலையில் சரிந்தன.

பெரும் விபத்து நடந்தும் அதிா்ஷ்டவசமாக, அந்த லாரியையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீஸாா் கிரேன் மூலம் கம்பிகளையும், லாரியையும் அப்புறப்படுத்தினா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT