மருங்காபுரி ஒன்றியத்தில் மக்கள் சந்திப்புப் பயணம்
மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மக்கள் சந்திப்புப் பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மக்கள் சந்திப்புப் பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவா் பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட திமுக பொருளாளா் என். கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினா் இரா.குணசேகரன், ஒன்றிய திமுக செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், காங்கிரஸ் கட்சியின் மணப்பாறை நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, வட்டாரத் தலைவா் சின்னப்பன், திருச்சி தெற்கு மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி சரோஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.