திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்மாழ்வாா் மோட்சம் நிகழ்ச்சி

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி பகல் பத்து விழா நடைபெற்றது. வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்ச்சி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும், பொதுஜனச் சேவை 9 மணி வரையும் நடைபெற்றது.

பின்னா் 9.30-க்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.30-க்கு மூலஸ்தானம் சேர்ந்தார். இயற்பா பிரபந்தம் இரவு 8. 30 மணிமுதல் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரையும், பின்னா் 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது. 

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT