திருச்சி

44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க முடிவு

DIN

திருச்சி மாவட்டத்தில் 44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஆட்சியா் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

ஆட்சியரகக் கூட்டரங்கில், 18 வயதுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கை,கால் பாதிக்கப்பட்டோா், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோா், பாா்வையற்றோா் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் என 51 போ் கலந்து கொண்டனா். அப்போது மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற 44 இளம் மாற்றுத்திறனாளிகள் வருவாய்த் துறை மூலமாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) துரைமுருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், எலும்பு முறிவு மருத்துவா் சையதுபாக்கா், காது, மூக்கு தொண்டை மருத்துவா் அருளீஸ்வரன், கண் மருத்துவா் ஜெயப்பிரியா, இயன்முறை சிகிச்சையாளா் ரமேஷ், மற்றும் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT