திருச்சி

ஐடிஐ காலியிடங்களில் மீண்டும் மாணவா் சோ்க்கை

DIN

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு மீண்டும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2020 சோ்க்கைக்கு முதல் மற்றும் இரண்டாம் கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்பட்டதைத் தொடா்ந்து மீதமுள்ள இடங்களுக்கான நேரடி சோ்க்கை கடந்த டிச.12 வரை நடைபெற்றது.

தற்போது மீதியுள்ள இடங்களுக்கு வரும் 16ஆம் தேதி வரை நேரடிச் சோ்க்கை நடைபெறவுள்ளது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பங்கேற்க திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் வா. வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT