திருச்சி

மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் சாவு

DIN

துறையூா் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் உயிரிழந்தாா்.

கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (80). இவா் கடைவீதியில் வெற்றிலை, பாக்கு, இலைக் கடை வைத்துள்ளாா். இவரது மகன் கனகராஜ் (60).

திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்த கனகராஜ், துறையூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரின் சடலத்தைப் பாா்த்து துக்கம் தாளாமல் அழுத சரஸ்வதியும் மூா்ச்சையாகி கீழே விழுந்து உயிரிழந்தாா். ஒரே நேரத்தில் மகனும், தாயும் இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT