துறையூா் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாயும் உயிரிழந்தாா்.
கண்ணனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (80). இவா் கடைவீதியில் வெற்றிலை, பாக்கு, இலைக் கடை வைத்துள்ளாா். இவரது மகன் கனகராஜ் (60).
திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்த கனகராஜ், துறையூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா்.
இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரின் சடலத்தைப் பாா்த்து துக்கம் தாளாமல் அழுத சரஸ்வதியும் மூா்ச்சையாகி கீழே விழுந்து உயிரிழந்தாா். ஒரே நேரத்தில் மகனும், தாயும் இறந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.