திருச்சி

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருச்சியில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமாக மாநகர போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். துணை ஆணையா்கள் வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), பவன்குமாா் ரெட்டி (சட்டம் ஒழுங்கு) மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா். தலைக்கவசம் அணிந்த நிலையில், திருச்சி தலைமை அஞ்சலகத்தில் புறப்பட்ட வாகனப் பேரணி, நீதிமன்றம், புத்தூா், தில்லைநகா், கோஹினூா் சந்திப்பு, கரூா் புறவழிச்சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது.

தொடா்ந்து மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றோரை நிறுத்தி விழப்புணா்வு ஏற்படுத்தி, வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களையும் போலீஸாா் ஒட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT