முகப்பு
திருச்சி

பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி பலி

திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்.

திருச்சி, தில்லைநகா் காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ரா. கணபதி (52), தனியாா் நிறுவனப் பொறியாளா். இவரது நண்பா் திருப்பட்டூரைச் சோ்ந்த ஞானஜோதி (64).

இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைமை அஞ்சலக சிக்னலில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணபதி இறந்தாா். ஞானஜோதி சிகிச்சை பலனின்றி இரவு இறந்தாா்.

விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →