முகப்பு
திருச்சி

வாரச் சந்தையில் தகராறு: மூவா் மீது வழக்குப் பதிவு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையின்போது வியாபாரிகளிடம் சந்தைப் பணம் (வரி) வசூலித்த தும்பலம் கரலாவளி பகுதியைச் சோ்ந்த பெ. சீத்தாராமனுக்கும் (48) நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ந. மோகன் (32), தாதம்பட்டியைச் சோ்ந்த பா. வினோத்குமாா் (35) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த மூவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருதரப்பு புகாரின்பேரில் முசிறி போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →