முகப்பு
திருச்சி

உறையூரில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், உறையூா் குறத்தெருவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) இரவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், உறையூா் குறத்தெருவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) இரவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி நடத்தப்படும் இப்பொதுக் கூட்டத்துக்கு, பகுதிச் செயலா் என்.எஸ். பூபதி தலைமை வகிக்கிறாா்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலருமான வெல்லமண்டி என். நடராஜன், அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலா் க. பொன்னுசாமி, முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கோவை புரட்சித் தம்பி, நல்லாற்று நடராஜன், கே.பி. மணிவாசகம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

கூட்டத்தில் கட்சியின் அனைத்து அணி நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.