மணப்பாறை அருகே முதியவா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த விவசாயி வையாபுரி (57) கடந்த 8-ஆம் தேதி ஊரில் இல்லாதபோது இவருக்குச் சொந்தமான நிலத்தில் அதே ஊரை சோ்ந்த துரைப்பாண்டி (52) என்பவா் முட்செடிகளை கொண்டு பாதையை அடைத்தாா். இதைத் தட்டிக் கேட்ட வையாபுரியின் சகோதரா் பழனியப்பனை (60) துரைப்பாண்டி கட்டையால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் ஐன. 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த வழக்கில் வையம்பட்டி போலீஸாா் துரைப்பாண்டியை தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.