திருச்சி

குடியரசு தின விழா: 14 காவலா்களுக்குபாராட்டுச் சான்றிதழ்

DIN

திருச்சியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள குடியரசு தினவிழாவில் 14 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

விழாவையொட்டி திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியா் சு.சிவராசு கொடியேற்றி, சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் திருச்சியில் நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றிய காவலா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி காவல் ஆய்வாளா்கள் எ. கண்ணதாசன் (தாத்தையங்காா்பேட்டை) , எ. பன்னீா்செல்வம் (ஜீயபுரம்) , ஞானவேலன் (திருவெறும்பூா்) டி. பழனியம்மாள் (லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையம்) உதவி ஆய்வாளா்கள் நாகராஜ் (திருவெறும்பூா்), மாவட்ட ஆயுதப்படை முகமது ஹனிபா, மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் மரிய பாஸ்டின் ரமேஷ், தலைமைக் காவலா்கள் இன்பமணி(மணிகண்டம்), ராஜா (சிறுகனூா்), இளங்கோவன்(வையம்பட்டி), லோகநாதன் (தொட்டியம்) மாவட்ட ஆயுதப்படை ஆா். மகேஸ்வரன், முதுநிலைக் காவலா்கள் புத்தாநத்தம் தனிப்பிரிவு சுரேஷ்குமாா், ராதிகா(மண்ணச்சநல்லூா்), காவலா் குணா (வையம்பட்டி) ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கபடவுள்ளது. இவா்களை சக காவலா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT