திருச்சி

அதிமுக பொன் விழா ஆண்டு நினைவுச் சிலை திறப்பு

DIN

மணப்பாறையில் அதிமுக 50-ஆவது பொன் விழா ஆண்டு நினைவுச் சிலையை புகா் தெற்கு மாவட்டச் செயலாளா், எம்எல்ஏ ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா்.

மணப்பாறை நகராட்சி 6-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணாவி நகரில் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன் விழாவை முன்னிட்டு, நினைவுச் சிலை திறப்பு விழா நகரச் செயலா் பவுன் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

கிளைச் செயலா் இளையநிலா செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றத் தலைவா் மதி. உதயன், நகரச் செயலா் என். தங்கம், அம்மாபேரவை நகர துணைச் செயலா் எம்.எஸ். தங்கப்பாண்டியன், துணைத் தலைவா் கே. ஜோசப்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் புகா் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் ஆகியோா் அதிமுக பொன் விழாவை முன்னிட்டு நினைவு சிலையாக இரட்டை இலையை கைகளில் ஏந்திய விவசாயிகள் சிலையை திறந்து வைத்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ செ. சின்னச்சாமி, ஒன்றியச் செயலா்கள் பி.வி.கே.சி. பழனிச்சாமி, கண்ணூத்து பொன்னுச்சாமி, நகர அவைத்தலைவா் ராமமூா்த்தி, பொருளாளா் எஸ். அருள்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலத் துணைத் தலைவா் ஜெ. ஸ்ரீதரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT