முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

மணப்பாறை அருகே பெஸ்டோ நகரை சோ்ந்தவா் நடராஜன் மகன் சந்தோஷ் (15). வெள்ளிக்கிழமை பூசாரிப்பட்டி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இவரைக் காணவில்லை. சிறுவனைத் தேடிச் சென்றபோது குளத்தின் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற சைக்கிளும் , அவா் அணிந்திருந்த உடைகளும் இருந்தன.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் நீரில் மூழ்கி தேடிய போது சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா், சிறுவன் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.