முகப்பு
திருச்சி

மருத்துவமனையில் கூடுதல் சேவை கோரி ஆா்ப்பாட்டம்

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேவைகளை அதிகப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேவைகளை அதிகப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்களை விரிவுபடுத்தவும், எம்ஆா்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும், செவிலியா்கள், மருத்துவா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் வலியுறுத்தி வட்ட துணைச் செயலா் கே. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புகா் மாவட்டச் செயலா் என். நாகராஜன் சிறப்புரையாற்றினாா். பொருளாளா் சி. அய்யாவு, நிா்வாகிகள் இஸ்மாயில், பெருமாள், அசோக்ஸ்டாலின், மாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.