முகப்பு
திருச்சி

கல்குவாரியில் மூதாட்டி சடலம்

திருச்சியில் கல்குவாரி பள்ள தண்ணீரில் மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருச்சியில் கல்குவாரி பள்ள தண்ணீரில் மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை சடலமாக கிடந்தாா்.

துவாக்குடி அண்ணாநகா் பகுதி கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் பெண் ஒருவா் இறந்து கிடக்கும் தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, நவல்பட்டு தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

இந்நிலையில் இறந்து கிடந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்ற செல்வராஜ் (75) மனைவி சங்கரம்மாள் (70) எனத் தெரியவந்தது.

கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவரைக் காணவில்லை என அவரது மகன் செந்தில் துவாக்குடி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த செந்தில் மற்றும் உறவினா்கள் சடலத்தை அடையாளம் காட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.