முகப்பு
திருச்சி

தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

திருச்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவற்றை மாநகர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருச்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவற்றை மாநகர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாநகரம் காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ஒரு காரில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது ஒரு காரில் 11 மூட்டைகளில் புகையிலைப் பொருள்களான குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அப்பொருள்களை கொண்டு சென்று விநியோகித்த காட்டூா் பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கத்தை காந்தி மாா்க்கெட் போலீஸாா் கைது செய்தனா். மேலும் புகையிலை பொருள்களோடு, காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.