நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
திருச்சி மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
உப்பிலியபுரம் வட்டாரத்தில் பி.மேட்டூா், வைரிச்செட்டிப்பாளையம், புளியஞ்சோலை (தங்கநகா்), ஆலத்துடையான்பட்டி, எரக்குடி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு கோடை பருவ நெல் கொள்முதல் செய்திட மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 1000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன்படி, மணிகண்டம் வட்டாரத்தில் நவலூா் குட்டப்பட்டு, உப்பிலியபுரம் வட்டாரத்தில் பி. மேட்டூா், எரக்குடி, வைரிச்செட்டிப்பாளையம் ஆகிய 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்தாண்டு ஜூலை 7 முதல் கூடுதலாக ஒரு யூனிட் அமைத்து, நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குக்கு அனுப்பப்படுகிறது.
அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஓரிரு நாள்களில் மழைக்கு முன் கூடுதல் பணியாளா்கள் அமா்த்தப்பட்டு, நெல் கொள்முதலை மிகத்துரிதமாக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சு.சிற்றரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சாந்தி, துறையூா் வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.