4,800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு
தமிழக அரசின் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம், மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 4,800 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்யலாம்.
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கு 50 சத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 70 சத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 (பசு, எருமை) மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தில் இரண்டரை முதல் எட்டு வயதுடைய பசு, எருமைகளுக்கு காப்பீடு செய்யலாம். பயன் பெற விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம் என கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.