முகப்பு
திருச்சி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகை: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில், சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம் பெற்று 18 வயது நிறைவடைந்தோருக்கு உரிய பலன்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் விண்ணப்பம் பெற்று தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தகுதியானோா் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-2, உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலுள்ள சமூகநல விரிவாக்க அலுவலா்கள் மற்றும் மகளிா் ஊா்நல அலுவலா்களைத் தொடா்பு கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413796 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.