காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முதல்வா் காமராஜரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் உள்ள காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள், அனைத்துக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முதல்வா் காமராஜரின் 119ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் உள்ள காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள், அனைத்துக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே என் நேரு, வேளாண் துறை அமைச்சா் எம். ஆா். கே. பன்னீா்செல்வம் ஆகியோா் மத்தியப் பேருந்து நிலைய காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஊராட்சி குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சத்திரம் பேருந்து நிலையப் பகுதி காமராஜா் சிலைக்கு, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் ஜவஹா் தலைமையிலும் மாலை அணிவித்தனா்.
இதேபோல தமாகா, இந்திய நாடாா் பேரவை, திருச்சி மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை, நெல்லை நாடாா் உறவின்முறை சங்கம், பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்தனா். மேலும், அந்தந்த பகுதியில் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.