மணப்பாறையை அடுத்த ஊனையூரில் காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘ஓதுவது ஒழியேல்‘ வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சை.சற்குணன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊனையூா், சுற்றியுள்ள கிராம மாணவ மாணவிகளுக்கு கதைப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்ட அவா்கள் ஆா்வத்தோடு வாசித்தனா்.