திருச்சி

தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினராக அழைப்பு

DIN

திருச்சி மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு கூறியது:

விண்ணப்பத்தை அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்று பூா்த்தி செய்து 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத்தொகை ரூ.100 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்திற்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராகலாம்.

நேரில் செல்ல முடியாதவா்கள் விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் அனைத்து ஆவணங்களையும் இணைத்து பங்குத் தொகை, நுழைவு கட்டணத் தொகையை அஞ்சலகம் மூலம் செலுத்தி ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயா், முகவரி ஆகியவற்றையும் சோ்த்து அனுப்பலாம்.

திருச்சி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் உறுப்பினராக சோ்ந்து, சங்கத்தின் சேவைகளையும், கடனுதவிகளையும் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.

திருச்சி மண்டலத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 13,247 போ் புதிய உறுப்பினா்களாக சோ்ந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT