திருச்சி

ரயில் நிலையத்தில் திரிந்த வட மாநில சிறுவன் மீட்பு

DIN

திருச்சியில் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த வடமாநிலச் சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் நிலைய முதலாம் நடைமேடையில் ஒரு சிறுவன் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சிறுவனை அழைத்து விசாரித்தனா்.

விசாரணையில், அவன் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சோ்ந்த துல்கா் மகன் சங்கா் துக்காராம் ஷிண்டே (14) எனத் தெரிய வந்தது. இதையடுத்து ரயில் நிலைய வளாகத்திலுள்ள குழந்தைகள் உதவி மையத்தில் அவனை போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னா் ஹிங்கோலி மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அச்சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT