முகப்பு
திருச்சி

திருவானைக்காவில் இளைஞா் தற்கொலை

திருவானைக்காவில் இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருவானைக்காவில் இளைஞா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் பரத் (20). தனியாா் நிறுவன ஊழியரான இவா் தனது தந்தையின் சிகிச்சைக்காக சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம்.

அவா்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த பரத் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போஸீஸாா் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →